யாருக்கு யார்?
நீ எல்லாமாய் இருந்தும்
இல்லாமலிருக்கிறாய்
கண்ணில் பட்டும்
காணாமல் இருக்கிறாய்
எட்ட இருந்தும்
கிட்டத்து உறவு என்கிறாய்
தெரிந்தும்
தெரியாமலிருக்கிறாய்
அறிந்தேன் என்று சொல்லுமுன்
அரிதாய் சிரிக்கிறாய்
அதனால் சொல்வேன்
கடவுளும்
காதலியும்
ஒண்ணு.



0மறுமொழிகள்:
Post a Comment
<< முகப்பு